இத்தளம் முற்றிலுமாக திருக்குர்அன் மற்றும் ஹதீஸ்களை கொண்டு இயங்கும் தளமாகும்.
திருக்குர்அன் வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து மட்டுமே நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நமக்கு இந்த தீனுல் இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே இருக்கிறோம்.
நாம் பிறந்ததிலிருந்து மரணம் வரை நாம் சந்திக்கின்ற எல்லா பிரச்சினைகளையும் தலைப்பாக்கி அதன் கீழ் திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தொகுக்க முடிவு செய்து தளத்தின் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தலைப்புகளுக்கான குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்ப்பதில் அதிக பிரச்சினையை நாம் சந்திக்க வேண்டிவராது. அதே சமயம் `ஹதீஸ்களை நாம் சேகரிக்கும் போது அதில் ஆதாரப்பூர்வமான ஹதீஸா அல்லது பலவீனமான ஹதீஸா என்பதில் மக்களுக்கு சந்தேகம் வரும். மேலும் இது வரை அந்த சந்தேகத்தை தமிழ் உலக மக்களுக்கு சரியான முறையில் யாரும் தீர்த்து வைக்கவில்லை. எனவே இங்கு நாம் தலைப்புகளின் கீழ் வெளியிடும் ஹதீஸ்களில் உள்ள அறிவிப்பாளர் தரங்களில் ஏதேனும் குறையிருந்தால் அதை அறிந்தவர்கள் அதை கருத்தாக பதிவு செய்தால் நாம் அதை சம்மந்தப்பட்ட ஹதீஸின் குறிப்பாக பதிவு செய்து வைத்து விடுவோம். இக்குறிப்பு இஸ்லாத்தை பின்பற்ற நினைக்கும் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். எனவே ஹதீஸின் தரங்களை அறிந்தவர்கள் அதை தவறாமல் பதிவு செய்து உதவி செய்யவும்.
மேலும் ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கான அரபி மூலத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் அந்த தவறுகளையும் நாம் சரிசெய்துக்கொள்ளலாம். மேலும் ஹதீஸ்களை அரபு மூலத்துடன் தொகுத்து வெளியிடவும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இத்தள மேம்பாட்டிற்கான உங்கள் உயரிய ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நீங்களாக விரும்பி செய்தால் அது மறுமையில் இஸ்லாமிய கல்வியை மக்களிடம் உள்ளது உள்ளபடி சென்று சேர்க்க பிரச்சாரம் செய்தற்கான நன்மைகளை உங்களுக்கும் எங்களுக்கும் இன்ஷாஅல்லாஹ் பெற்றுத்தரும்.
இதன் மூலம் வாழ்வில் சந்திக்கும் அன்றாட தேவைகளுக்கான தீர்வை அல்லாஹ்வின் திருக்குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் ஏவல் விலக்கல்களில் இருந்தும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்ற நன்னோக்கத்தில் இத்தளத்தை அல்லாஹ்வின் திருப்தியை நாடி உருவாக்கியுள்ளோம். திருநெல்வேலி ஏர்வாடி ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் சகோதரர்களாகிய நாங்கள் அல்லாஹ்வுக்கே இத்தளத்தை உரித்தாக்குகின்றோம்.
இப்படிக்கு
தள தொகுப்பாளர்











